பொலிஸ் விசேட அதிரடிப்படையுடன் இணைந்து பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் இதுவரை 13,000 க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களை போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மொத்தம் 13,666 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 1097 பேர் புனர்வாழ்விற்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.