மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 2024 ஜனவரி 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளார்.
இதன்படி, புத்தபெருமான் உட்பட பல்வேறு மத பிரமுகர்களுக்கு எதிராக பல தரக்குறைவான அறிக்கைகள் வழங்கியதாக கைது செய்யப்பட்ட மதபோதகர் ஜெரோம் இன்று (டிசம்பர் 27) காலை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கு, டிசம்பர் 01 ஆம் திகதி வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வளாகத்திற்கு வந்த சில மணிநேரங்களில் அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.