ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தொடர் கூட்டங்களை நடத்தவுள்ளது.
இதன்படி, லங்காதீப செய்தி பிரிவின் கூற்றுப்படி, ஐக்கிய தேசியக் கட்சி 2024 ஜனவரி 19 முதல் தேர்தல் தொடர்பான தொடர் கூட்டங்களை நடத்தவுள்ளதாகவும் முக்கிய பொதுக்கூட்டத்தை முதலில் கொழும்பில் நடத்துவதற்கு கட்சி தீர்மானித்துள்ளதுடன் பின்னர் நாட்டின் ஏனைய பகுதிகளில் மேலும் பல பேரணிகள் நடத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது..
மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு மற்றும் ஏனைய தொடர்புடைய குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்குள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.