அண்மைக்காலமாக நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடைகளுக்கு இலங்கை மின்சார சபையின் தவறு இருப்பதாக இலங்கை மின்சார சபை ஒப்புக்கொண்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று புதன்கிழமை (.27) தெரிவித்துள்ளது.
இதன்படி, அரசுக்கு சொந்தமான மின்சாரம் வழங்குனரை மேற்கோள் காட்டி,பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த மாத தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட திடீர் நாடுதழுவிய மின்வெட்டைத் தொடர்ந்து 5 மணி நேரத்திற்கும் மேலாக மின்சார விநியோகத்தை மீட்டெடுக்கத் தவறியதற்கு இலங்கை மின்சார சபை பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியது.
போதிய நிதியில்லாத காரணத்தினால், அவ்வாறான அவசர நிலைமைகளின் போது பயன்படுத்துவதற்கு மேலதிக மின் உற்பத்தி இயந்திரத்தை பராமரிக்க முடியாதா உள்ளது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கூடுதல் மின் உற்பத்தியாளருக்கான பராமரிப்பு செலவுகளை இலங்கை மின்சார சபை கண்டுபிடிக்கும் பொறுப்பு உள்ளதாகவும் அவ்வாறில்லாத சந்தர்ப்பங்களில் பொது மக்களே சுமையை சுமக்க வேண்தியா நிலமைக்கு உள்ளாகுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
மேலும், டிசம்பர் 09 ஆம் திகதி மாலை 5.10 மணியளவில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடைக்கான காரணமாக கொத்மலையில் இருந்து பியகம வரையான மின் விநியோக பாதையில் ஏற்பட்ட கோளாறு, மின்னல் தாக்கம் காரணமாக ஏற்படட மின் தடையே என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.