எரிபொருள் மற்றும் எரிவாயு மீதான பெறுமதிசேர் வரியை நடைமுறைப்படுத்துவதற்கு முன், துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்படும் என நிதியமைச்சின் வரி கொள்கை ஆலோசகர் திருமதி தனுஜா பெரேரா தெரிவித்துள்ளார்.
இதன்படி, எரிபொருளுக்கான 18 சதவீத பெறுமதிசேர் வரியினை அமுல்படுத்தும்போது, 7.5 சதவீத துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்படும் எனவும் எரிவாயுவுக்கான 18 சதவீத பெறுமதிசேர் வரியை அமுல்படுத்தும்போது, 2.5 சதவீத துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்படும் எனவும் திருமதி தனுஜா பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், எரிவாயு, பெற்றோல் மற்றும் டீசல் விலைகளில் ஏற்படும் மாற்றம் தொடர்பில் ஜனாதிபதி ஊடக அமையத்தில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு விளக்கமளிக்கப்பட்டது.