2022 ஆம் ஆண்டில் மேல், வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்கள் நாட்டின் பொருளாதார செயற்பாட்டிற்கு முன்னணி பங்களிப்பை வழங்கியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதன்படி, 2022 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 43.4% ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், சேவை மற்றும் தொழில் துறைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, அதிக பங்களிப்பு மேல் மாகாணமும் இரண்டாவது மற்றும் மூன்றாவது பங்களிப்பு முறையே வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களும் வழங்கியுள்ளன.