தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக பணியாற்றுவதைத் தடுக்கும் உத்தரவைக் கோரியும், அவர் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவதைத் தடுக்குமாறும் கோரி நான்கு அடிப்படை உரிமைகள் மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், உண்மை மற்றும் நீதிக்கான சட்டத்தரணிகள் அமைப்பு, 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மூன்று பேர் மற்றும் போராட்டக்காரர்கள் ஆகியோர் குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
தென்னகோன் மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய காலத்தில், ஈஸ்டர் தாக்குதல் மற்றும் ‘ஆரகலய’ என அழைக்கப்படும் ‘கோட்டாகோஹோம்’ போராட்டத்தின் மீதான தாக்குதலின் போது அவர் தனது கடமைகளை மீறி காலி முகத்திடலில் பல போராட்டக்காரர்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
எனவே, நாட்டில் சட்டத்தை அமுல்படுத்தும் பொறுப்பு வகிக்கும் குறித்த பதவியை, தனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளுக்கு மாறாக, அடிப்படை விதிகளை மீறி செயல்படும் ஒருவருக்கு வழங்காது மனிதாபிமான குணம் கொண்ட ஒருவருக்கு வழங்க வேண்டும் என மனுக்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.