நாட்டில் இருந்து முற்றாக ஒழிக்கப்பட்ட தட்டம்மை நோய் மீண்டும் தலைதூக்குவதற்கும், நாட்டில் எழுநூறு பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் தொற்றுநோய் நிலைமையை உருவாக்குவதற்கும் சுகாதார அமைச்சு பொறுப்பேற்க்கவேண்டும் என சுகாதார நிபுணர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
மேலும், கட்டுக்குள் இருந்த தொழுநோய், மலேரியா,டெங்கு, எய்ட்ஸ் போன்ற நோய்கள் அதிகளவில் அதிகரித்துள்ளதால், தொற்றுநோயியல் துறையினர் பொறுப்பை மக்கள் மீது சுமத்த முடியாது என, சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, காலாவதியான பழமைவாத முறைகளை கடைப்பிடிப்பதாலும், சுகாதார சேவைக்காக பெறப்படும் அதிகபட்ச உதவித்தொகையை முறையாக பயன்படுத்த தவறியதாலும், மக்கள் தொற்றுநோயியல் துறையிலிருந்து பெறக்கூடிய சேவைகளைப் பெறவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.