ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.
நிலநடுக்கம் காரணமாக மின்சார விநியோகமும் தடைப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், பல வீடுகள் முற்றிலும் தரைமட்டமாகியுள்ளதாகவும் அவற்றில் ஏராளமானோர் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அத்தோடு, பலர் உயிருடன் புதைக்கப்பட்டதுடன் நிலநடுக்கத்தால் பெரும்பாலான சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், மின்சாரம் இன்றி 35,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுவதோடு நிலநடுக்கத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.