அரசுக்கு சொந்தமான இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் சட்டமூலத்திற்கு எதிராக நாளை (03) முதல் மூன்று நாள் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த சட்டமூலத்தை உடனடியாக வாபஸ் பெறுமாறு மின்சக்தி அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக சங்கத்தின் பிரதம செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, “மிசாரத்துறை அமைச்சர்கஞ்சன விஜேசேகர இதனை ஜனாதிபதியுடன் சேர்ந்து விற்க விரும்புகிறார். இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் தன்னிச்சையாக நிறைவேற்றப்பட்டால், மின்சார சபை ஊழியர்கள் பாரிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்.
“முடிந்தால் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு காஞ்சனாவுக்கு நாங்கள் பகிரங்க சவால் விடுகிறோம். அன்று, அனைத்து இலங்கை மின்சார சபை ஊழியர்களையும் அங்கு அழைத்து வருவோம்,” என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினர்.
இதேவேளை, புதிய கடற்றொழில் சட்டத்தினால் தமது தொழில் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை கடற்றொழில் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.