இன்று (02) நள்ளிரவு 12:30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர இலங்கை காவல்துறை, சிறப்பு அதிரடிப்படை இராணுவம் மற்றும் கடற்படை ஆகியவை இணைந்துமேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் மேலும் 822 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, கைது செய்யப்பட்டவர்களில் 72 பேர் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் மேலதிக விசாரணைகளுக்காக 60 சந்தேக நபர்களை தடுப்புக்காவலில் வைக்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது,
பொது பாதுகாப்பு அமைச்சின் தகவலின்படி, ‘யுக்தியா’ என்ற சிறப்பு நடவடிக்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய சோதனைகளில் 273 கிராம் ஹெரோயின், 111 கிராம் மெத்தம்பேட்டமைன் (‘ஐஸ்’) மற்றும் 426 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், 1.62 கிலோ கஞ்சா மற்றும் 100 கஞ்சா செடிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.