2024 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்களை கோருவது ஜனவரி மாத இறுதியில் அல்லது பெப்ரவரி மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
மேற்று திங்கட்கிழமை (01) ஜனாதிபதி ஊடக மையத்தில் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய நிதி இராஜாங்க அமைச்சர் 1.4 மில்லியனுக்கும் அதிகமான பயனாளிகளுக்கான டிசம்பர் தவணை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அத்தோடு, மொத்தம் 2 மில்லியன் மக்களுக்கு இந்த நன்மைகளை வழங்குவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் தகுதியான பெறுநர்களைக் கண்டறிவதற்கும், முந்தைய ஆண்டிலிருந்து பலன்கள் விநியோகச் செயல்பாட்டில் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும் கடுமையான முயற்சிகள் நடந்து வருவதக்கவும் தெரிவித்துள்ளார்.