பொத்துஹெர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறிபோட்டாவில், 5,000 ரூபாய் 45 போலி நாணயத்தாள்களை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (04) சந்தேகத்தின் அடிப்படையில் பொத்துஹெர பொலிஸார் குறித்த நபரை சோதனையிட்ட நிலையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், பொல்பித்திகம பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான சந்தேக நபர், போலி நாணயத்தாள்களை அச்சடித்து வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் முன்னர் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டவர் எனவும்பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு, மேலதிக விசாரணைகளை பொத்துஹெர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.