நவகமுவ பெரஹராவின் நேரடி ஒளிபரப்பிற்காக கட்டணத் தொகையை இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்காமல் இராஜாங்க அமைச்சர் ஒருவர் இழுத்தடிப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி இடம்பெற்ற நவகமுவ பெரஹராவின் நேரடி ஒளிபரப்பிற்காக இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கு ஒன்பது இலட்சம் ரூபா செலுத்த தவறியுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த இராஜாங்க அமைச்சரினுடைய வேண்டுகோளுக்கு இணங்க நவகமுவ ஸ்ரீ சத்பத்தினி மகா ஆலயத்தினது 188 ஆவது ரந்தோலி பெரஹராவினை நேரடியாக ஒளிபரப்புவதற்காகவே இந்நிதித் தொகையானது செலவிடப்பட்டாக தெரியவருகின்ன்றது.
மேலும், நிலுவைத் தொகை குறித்து ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் பிரதம கணக்காளர், அமைச்சருக்கு பலதடவைகள் நினைவூட்டிய போதும் நிதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.