தலைமன்னார் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது குறித்த பகுதியில் ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து 10 கிராம் ஐஸ் மற்றும் 230 மில்லிகிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பேசாலை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வடமாகாண விசேட சுற்றிவளைப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, துப்பாக்கி ரவைகள், தோட்டாக்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் கஞ்சா விதைகளை வைத்திருந்த நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
படையின் சியம்பலாண்டுவ முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின்படி, மஹகளுகொல்ல, கலேராவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
அப்பகுதியை சேர்ந்த கந்தடே உட்பங்குவா என்பவர் அங்கு கைது செய்யப்பட்டார்.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் மஹகளுகொல்ல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேலும் தெரிவித்தனர்.