கடற்கரைகளில் கழிவு முகாமைத்துவத்திற்கு ஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் ஊடாக பயன்படுத்தக்கூடிய கடற்கரை சுத்தப்படுத்தல் ஒருங்கிணைப்பு செயலியினை அறிமுகம் செய்வது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்றது.
இதன்படி, கடலோர மற்றும் கடல்சார் சூழலின் நிலையான வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை முறையாக ஒருங்கிணைத்து, கடலோர பாதுகாப்பு ஆணைக்குழுவின் தலையீட்டுடன் இந்த மொபைல் பயன்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
மேலும், கடல் மற்றும் கடற்கரையின் தூய்மையைப் பாதுகாப்பதன் மூலம் நிலையான கடல் மற்றும் கரையோர வலயத்தை உறுதி செய்யும் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் என்றும், இந்த புதிய மொபைல் பயன்பாடு அந்த நடவடிக்கைகளை எளிதாக்க உதவும் என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.