எதிர்வரும் அதிபர் தேர்தலில் பொதுஜன முன்னணியின் வேட்பாளர் யார் என்பது விரைவில் தீர்மானித்து உறுதிபட அறிவிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதன்படி, கட்சியின் வேட்பாளர் யார் என்பதனை தீர்மானிக்கும் நோக்கில் கட்சியின் தலைவர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தையும் நடாத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வேட்பாளர் தொடர்பாக பலரும் பல்வேறு கருத்துக்களினையும் விமர்சனங்களினையும வெளியிட்டு வருகின்ற நிலையில் கட்சியினுடைய இறுதித் தீர்மானத்தினை அதிகாரபூர்வமாக இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தநிலையில், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக கட்சியினுடைய முக்கியத் தலைவர்களுக்குள் இரகசிய சந்திப்புகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்க விடையமாகும்.