நெல்லிகல சர்வதேச பௌத்த நிலையத்திற்கு சென்று திரும்பிய பக்தர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 37 பேர் காயமடைந்துள்ளனர்.
பேராதனை யஹலதென்னையில் நேற்று (16) மாலை நெல்லிகலையில் இருந்து பூண்டலுஓயா நோக்கி பயணித்த பஸ்ஸே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்தானது 15 மீற்றர் சாய்வில் இருந்து கீழே விழுந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சாரதி உட்பட 38 பேர் பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர்களில் ஒருவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் பூண்டலுஓயா, ஹல்பொல பகுதியைச் சேர்ந்த 79 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், படுகாயமடைந்த இருவர் ஆபத்தான நிலையில் கண்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.