புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் திட்டம் தன்னிடம் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று (17) பெறுமதியான நட்புறவு வகுப்பறையை வழங்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்படி, பாடசாலைக் காலத்தில், வணிக மேலாண்மை மற்றும் தொழில் முனைவோர் சிந்தனைகளை உருவாக்க தேவையான தூண்டுதல்களை அளித்து, பாடசாலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறும்போது, தொழில்முனைவோராக மாறுவதற்கான பாதையை உருவாக்கி, தேவையான அடிப்படை மூலதனத்தை வழங்கஉள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.