எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் போக்குவரத்து விதிகளினை மீறுகின்ற சாரதிகளினது தகவல்களை தரவு அமைப்பில் உள்ளிடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
குற்றத்தின் தன்மை, சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையம், ஓட்டுநர் உரிமம் மற்றும் தொலைபேசி எண் விவரங்கள் அபராதம் செலுத்தப்படும் தபால் நிலையங்கள் மூலம் இந்த தரவு அமைப்பில் உள்ளிடப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் தேவைப்படும் வெளிநாட்டவர்கள் ஏப்ரல் 15ஆம் திகதி முதல் விமான நிலையத்தில் விண்ணப்பித்து சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.