கட்டுநாயக்க விமான நிலையத்தினுள் இன்று (23) காலை கொக்கெய்ன் என சந்தேகிக்கப்படும் 12 காய்களுடன் நபர் ஒருவரை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் வெனிசுவேலாவைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே பிரேசிலில் இருந்து துபாய் ஊடாக கட்டுநாயக்கவை இன்று காலை வந்தடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து 132 கிராம் எடையுடைய 12 காப்ஸ்யூல்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.