சிறுமியொருவர் தனது சொந்த விருப்பத்திற்கேற்ப பாலுறவு கொள்வதற்கான வயது தொடர்பான தண்டனைச் சட்டத்தின் 19வது அத்தியாயத்தை திருத்துவதற்காக 2024 பெப்ரவரி 09 ஆம் திகதி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி சட்டமூலம் மீளப்பெறப்படும் என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
1995 ஆம் ஆண்டு குற்றவியல் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களின்படி, 16 வயதுக்குட்பட்டவர்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் பாலியல் உறவு வைத்திருந்தாலும், அது பலாத்காரமாக கருதப்படும். எவ்வாறாயினும், நீதி அமைச்சரால் குற்றவியல் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தம் பாலின சம்மதத்தின் வயதை 14 ஆகக் குறைக்க முயன்றது.
எவ்வாறாயினும், கொழும்பில் இன்று (23) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ராஜபக்ஷ, இந்த வரைவு முன்வைக்கப்பட மாட்டாது எனவும் அது பாராளுமன்றத்தில் இருந்து வாபஸ் பெறப்படுவதாகவும் சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
“இந்த மசோதாவை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்கக் கோரி பல நபர்கள் என்னை அணுகியுள்ளனர். மேலும் கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும் என நான் அவர்களிடம் தெரிவித்துள்ளேன்” என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, “வரைவு [மசோதா] உச்ச நீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்டபோது, நாங்கள் அதைத் தொடர மாட்டோம் என்று சட்ட,மா அதிபருக்கு தெரிவித்தேன்.அத்தோடு, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, இந்தக் கலந்துரையாடலைத் தொடர்ந்து முடிவு எடுக்கப்படும். தற்போதைக்கு அது நாடாளுமன்றத்தில் இருந்து வாபஸ் பெறப்படும்” என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.