மாளிகைக்காடு செய்தியாளர்
கிழக்கின் கேடயத்தின் நாவிதன்வெளி பிரதேசசபை பிரிவுக்கான இளைஞர்களை சந்திக்கும் நிகழ்வு நேற்று (22) நாவிதன்வெளி இளைஞர் இணைப்பாளர் முஹம்மட் அர்சாத் தலைமையில் இடம்பெற்றது. இதில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கலந்துகொண்டு கிழக்கின் கேடயம் தலைவரும் முன்னாள் அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்களின் தலைவருமான எஸ்.எம். சபீஸ் அவர்களோடு இணைந்து கொண்டனர்
யாரையும் விமர்சிக்காமல் புதிய அரசியல் கலாச்சாரத்தோடு சமூதாய முன்னேற்றத்தில் அக்கரை கொண்டவர்களாக இளைஞர்கள் புதுப்பரிநாமம் எடுக்கவேண்டும். அதற்கு தலையாய கடமையான கல்வியை எக்காரணம் கொண்டும் விட்டுவிடக்கூடாது. என்றும் எல்லோரும் ஏதோ ஒரு துறையில் பட்டப்படிப்பினை நிறைவு செய்துகொள்ள வேண்டும். அத்தோடு சமூக உணர்வுகளோடும் எமது சமூகம் முறையாக முன்னேறுவதற்கான அடித்தளத்தை அடையாளப்படுத்தி முன்னேரக்கூடியவர்களாகவும் மாறவேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தொழிலதிபர் ஏ. கே. அமீர், IT Q Lab முகாமைத்துவ பணிப்பாளர் சபூர் ஆதம், தொழில் சங்க தலைவர் கபீர் கலீல், சமூக சேவகர் எச். வஹாம், ஆசிரியர்களான எம்.ஐ.எம். ராபி, இன்பாஸ் மற்றும் கிழக்கின் கேடயத்தின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.