பாதாள உலகக் குழு உறுப்பினரான அல்டோ தர்மாவுக்கும் நேரடித் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் அகலவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.ஆர்.ஹெட்டியாராச்சிக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் கவனம் செலுத்தியுள்ளார்.
இதன்படி, அகலவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.ஆர்.ஹெட்டியாராச்சி, மவுன்ட் கில்டேர் பொலிஸ் நிலைய குற்றப் பிரிவின் நிலையத் தளபதியாக இருந்த காலப்பகுதியில் இந்த தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது.
குறித்த தொலைபேசி உரையாடலின் ஒலிப்பதிவு சிங்கள ஊடகமொன்றின் மூலம் பரப்பப்பட்ட நிலையில் ஒலிப்பதிவு தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் மா அதிபர் பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளார்.
மேலும், அகலவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.ஆர்.ஹெட்டியாராச்சி பயன்படுத்திய மடிக்கணினி மற்றும் தொலைபேசி என்பன ஏற்கனவே பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.