நீதிமன்ற காரியாலயத்தில் உள்ள வழக்கு ஆவணத்தை பலவந்தமாக அழித்த குற்றச்சாட்டின் பேரில் கெக்கிராவ பிரதேசத்தைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவருக்கு வழக்கு விசாரணை முடியும் வரை சடடத்தரணி தொழில் செய்ய தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட சட்டத்தரணிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றப்பத்திரிகையை பரிசீலித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, காமினி அமரசேகர மற்றும் ஏ.எச்.எம்.டி நவாஸ் ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் குற்றப்பத்திரிகை அழைக்கப்பட்டது.
கெக்கிராவ நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு தொடர்பில், நீதிமன்ற ஊழியர்களின் பாதுகாப்பில் இருந்த ஆவணமொன்றை வலுக்கட்டாயமாக அபகரித்து, கடித்து சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், குறித்த சட்டத்தரணிக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன்படி, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் சட்டத்தை மீறியதாக தொடர்புடைய குற்றப்பத்திரிகை குற்றம் சாட்டியுள்ளது.
குறித்த சட்டத்தரணி சுமார் பன்னிரண்டு வருடங்களாக சட்டத் தொழிலில் ஈடுபட்டு வருவதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.