கோட்டை நீதவான் திலின கமகே மீதான கொலை முயற்சி தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் உத்தரவிட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக லங்காதீப பத்திரிகை தெரிவித்துள்ளது.
T81 கைக்குண்டு லாஞ்சரைப் பயன்படுத்தி நீதவானைக் கொலை செய்யத் திட்டமிடப்பட்டதாகக் கூறும் தகவலறிந்த நபரின் கடிதம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவு கிடைத்துள்ளது.
இதன்படி, நீதவானை கொல்வதற்காக தனிநபர் ஒருவர் தொலைபேசியில் இந்தத் துப்பாக்கியைக் கோரியதாகவும் குறித்த நபர் தெரிவித்துள்ளார்.
மேலும், துப்பாக்கிக்காக தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட நபரின் தொலைபேசி இலக்கமும் தகவலறிந்தவரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.