புளோரிடா மாகாணத்தில் சிறுவர்களுக்கான சமூக வலைத்தளங்களை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பான சட்டத்தில் மாநில கவர்னர் கையெழுத்திட்டுள்ளார்.
இதன்படி, புளோரிடா மாநிலத்தின்படி, 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடக கணக்குகளை வைத்திருப்பதை சட்டம் தடை செய்கின்றது.
மேலும், 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூக வலைதள கணக்குகளை நீக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக புளோரிடா மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார்.