அதுருகிரிய, கல்வருஷாவ வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று (27) அதிகாலை மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
தகவல்களின்படி, இந்த குறித்த தாக்குதல் “முத்துவா” என்ற மனோஜ் முத்துக்குமரனா என்ற குற்றக் கும்பலுக்கு தொடர்புடையவர்கள் எனவும் வீட்டினுள் குறைந்தது 7 தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்திய போதிலும், சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும், அண்மைக்காலமாக அதுருகிரிய மற்றும் நவகமுவ பிரதேசங்களில் பதிவாகிய பல குற்றச் செயல்களுக்கு வெளிநாடுகளில் இருந்து செயற்படும் “முத்துவா” உடந்தையாக இருந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.