லஹிரு வீரசேகர, துமிந்த நாகமுவ மற்றும் ரத்கரவே ஜினரதன தேரர் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, இன்று (27) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னர் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கடந்த 20ஆம் திகதி மக்கள் போராட்ட இயக்கம் கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது லஹிரு வீரசேகர, துமிந்த நாகமுவ, ரத்கராவே ஜினரதன தேரர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.