தென் மாகாணத்தில் இடம்பெறும் பாதாள உலகச் செயற்பாடுகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களினால் நேரடியாக சுற்றுலா வர்த்தகம் பாதிக்கப்படுவதாகவும் அதனால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாட்டில் நிலவும் அமைதியான சூழல் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவழைப்பதற்கும் சட்டம் ஒழுங்கைப் பேணுவதன் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு சாதகமான சூழலை உருவாக்க முடியும் என்றும் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.