72 சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 02) காலை 6.30 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற தலைமைக் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
இதன்படி, கடந்த மார்ச் 18ஆம் திகதி சுகாதார செயலாளருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது தமது பிரச்சினைகளுக்கு தீர்வுகாண 10 நாட்கள் அவகாசம் கோரியதாகவும், இந்த காலம் நாளையுடன் (28) முடிவடைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தமது குறைகளைத் தீர்க்கும் பொறுப்பை புறக்கணிக்கும் அனைத்து அதிகாரிகளும் சுகாதார சேவையில் ஏற்பட்டுள்ள பாரிய சீர்குலைவுகளுக்கும் நோயாளர்களுக்கு ஏற்படும் சகல அசௌகரியங்களுக்கும் பொறுப்பாவார்கள் என சுகாதார தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளார்.