நாட்டின் வருமானத்தில் 50 வீதத்துக்கும் அதிகமான தொகை கடனுக்காகவும் வட்டிக்காகவும் செலவிடப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இந்நிலையை மாற்ற மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு செல்ல வேண்டியது அவசியமானது எனவும் நாட்டில் சுகாதாரம் மற்றும் கல்விக்காக அதிகளவு பணம் செலவிடப்படுமென ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கை மற்றும் தெற்காசியாவிலேயே மிகப் பெரிய மகப்பேறு மருத்துவமனையான காலி கராப்பிட்டியவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜேர்மன்-இலங்கை நட்புறவு புதிய மகளிர் மருத்துவமனையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த மருத்துவமனையில் 640 படுக்கைகள், ஆறு அறுவை சிகிச்சை அரங்குகள், அவசர சிகிச்சை பிரிவுகள், தீவிர சிகிச்சை பிரிவுகள் மற்றும் குழந்தைகள் பிரிவுகள் உள்ளிட்ட அதிநவீன வசதிகள் உள்ளன.