பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்ட திட்டங்களை இவ்வருட நடுப்பகுதியில் மீண்டும் ஆரம்பிக்கத் தயார் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
சுமார் 900 திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் வெற்றிகரமான முன்னேற்றத்துடன் வரும் நம்பகத்தன்மையும் அதற்கு உதவும் என்று கூறிய அமைச்சர், பொருளாதாரம் -7.2% பின்தங்கிய வளர்ச்சியை அடைந்த அதேவேளை, கட்டுமானத்துறை 20.5% எதிர்மறையான வளர்ச்சியை அடைந்துள்ளது.
அரச சேவை தொழிநுட்ப உத்தியோகத்தர்களின் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட போதே நிதி இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.