பாதாள உலகக் குழு உறுப்பினர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அகலவத்தை பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் தரிந்து ருவன் ஹெட்டியாராச்சியின் சேவையை இடைநிறுத்துமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
இதன்படி, பாதாள உலக உறுப்பினர் என கூறப்படும் அல்டோ தர்மாவுக்கும் அகலவத்தை பொலிஸ் நிலையத்தின் நிலைய கட்டளைத் தளபதி பிரதம பொலிஸ் பரிசோதகர் தரிந்து ருவன் ஹெட்டியாராச்சிக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் ஊடகங்களில் பரவியதைஎடுத்து பொலிஸ் மா அதிபரின் பரிந்துரையின் பிரகாரம் இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்து விசாரணை நடத்த பொலிஸ் மா அதிபரினால் விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரியின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஐ.பி.டி.சுகதபால, களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.ஏ.காவிந்த பியசேகரவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இந்த பணி இடைநிறுத்த உத்தரவை அகலவத்தை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி பிரதான பொலிஸ் பரிசோதகர் தரிந்து ருவன் ஹெட்டியாராச்சியிடம் தாமதமின்றி கையளிக்குமாறும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், காலியாகவுள்ள அகலவத்தை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பதவிக்கு பொறுப்பதிகாரி ஒருவர் நியமிக்கப்படும் வரை, பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பதவிக்கு பொருத்தமான உத்தியோகத்தர் ஒருவரை நியமிக்குமாறும் உரிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பான அறிக்கையை இன்று காலை 08க்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு களுத்துறை மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.