பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான 2,535 ஆசிரியர் உதவியாளர்களுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த சில வாரங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு மே மாதத்திற்குள் பாடசாலைகளில் நியமனங்கள், ஆரம்ப பயிற்சிகள் மற்றும் பதவிகளை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
அத்தோடு, தோட்டத் துறைப் பாடசாலைகளில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகத் தெரிவித்த அவர், கல்லூரிக்குத் தகுதிபெறும் மாணவர்களே மிகக் குறைவு என்றும் பட்டதாரிகளில் ஒரு சிலரே உள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு தீர்வாக ஊவா மற்றும் மத்திய மாகாணங்களைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கு ஆரம்ப கட்ட நடவடிக்கையாக நியமனம் வழங்குவதற்கு உரிய மாகாண அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாககல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.