பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் பல பதவிகளுக்கு விசேட மாதாந்த ஊக்கத்தொகையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அண்மையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, பிரதேச செயலாளர் பதவிக்கு மாதாந்த ஊக்கத் தொகையாக 15,000 ரூபாவும், உதவிப் பிரதேச செயலாளர், உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்) மற்றும் கணக்காளர் பதவிகளுக்கு மாதாந்தம் 10,000 ரூபா ஊக்கத் தொகையும் வழங்கப்படவுள்ளதுடன், இந்தக் கொடுப்பனவை மார்ச் மாதம் முதல் வழங்குவதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளது.