நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளில் 728 சந்தேக நபர்களும் 13 பெண்கள் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (28) 742 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 34 பேரை மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கவுள்ளதாகவும், 17 பேரின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், 17 சந்தேக நபர்கள் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்படவுள்ளனர்.