நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர் சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஞானசார தேரரை பார்வையிட வந்த இராவணா சக்தி அமைப்பின் செயலாளர் நாயகம் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், சுகவீனமுற்ற ஞானசார தேரர் சிகிச்சைக்காக சிறைச்சாலை வைத்தியசாலைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.