சிரியாவின் அலெப்போ நகரை குறிவைத்து இஸ்ரேல் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்களை குறிவைத்து இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதில் சிரியா இராணுவத்தைச் சேர்ந்த 35 பேர் உயிரிழந்துள்ளதாகவும் உயிரிழந்தவர்களில் ஹிஸ்புல்லா உறுப்பினர்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், தொடர் தாக்குதல்களுக்குப் பிறகு, இஸ்ரேல் தனது தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் மூத்த உறுப்பினர் கொல்லப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.