நாடளாவிய ரீதியில் 20 விசேட பொலிஸ் குழுக்களை ஈடுபடுத்தி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த விசேட நடவடிக்கையின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த 08 பேர் மற்றும் 08 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல்மாகாண வடக்கு குற்றப்பிரிவு, மேல்மாகாண தெற்கு குற்றப்பிரிவு, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு, காலி குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் களுத்துறை குற்றப்பிரிவு ஆகியவற்றின் விசேட பொலிஸ் குழுக்கள் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது..
வெள்ளவத்தை, கெசல்வத்தை, ரத்கம, கல்கிஸ்ஸ, அங்கொட மற்றும் மெட்டியகொட ஆகிய இடங்களில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் 19ஆம் திகதி முதல் இந்த விசேட நடவடிக்கையின் கீழ் 343 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.