ஏப்ரல் 12ஆம் திகதி பொது விடுமுறை நாளாக இருந்தாலும் தபால் ஊழியர்கள் அன்றைய தினம் தமது கடமைகளை செய்வதற்கு இணங்கியுள்ளதாக ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
இதன்படி, புத்தாண்டு காலத்தை முன்னிட்டு மத்திய தபால் பரிவர்த்தனை வரலாற்றில் பாரிய அளவிலான பொருட்களை விநியோகிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தபால் திணைக்களம் மற்றும் மத்திய தபால் பரிவர்த்தனை ஆகியவற்றுக்கு வரலாற்றில் அதிகளவு பொருட்கள் கிடைத்த ஆண்டு இந்த வருடம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் உள்ளவர்கள் இலங்கையில் உள்ள தமது உறவினர்களுக்கான பொட்டலங்களாக அதிகளவான பொருட்களை அனுப்பியுள்ளதாகவும், அந்த பொருட்களை உரிய நேரத்தில் உரிய இடத்திற்கு அனுப்பி வைப்பது அவர்களின் பொறுப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தபால் மா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் அனைவரும் எதிர்வரும் 12ஆம் திகதி பணிக்கு சமூகமளிக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.