யாழில் இன்று (15) அதிகாலை இரு குழுக்களுக்கிடையில் வாக்குவாதம் முற்றி மோதலில் இரண்டு வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, புத்தாண்டு தினத்தன்று இடம்பெற்ற வாக்குவாதம் காரணமாக இன்று அதிகாலை இரு குழுக்களுக்கிடையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
மோதலில் ஈடுபட்டவர்கள் சிறிய ரக லொறி மற்றும் முச்சக்கரவண்டிக்கு தீவைத்துள்ளதுடன், சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனினும், தீவைப்பால் இரண்டு வாகனங்களும் பலத்த சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.