மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று இரவும் நாளை மாலையும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போதைய மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் பணிப்பாளர் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.
இந்த நாட்களில் மழையுடன் கூடிய பலத்த மின்னல்கள் ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதால், மின்னல் விபத்துக்களை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என வளிமண்டலவியல் பணிப்பாளர் அஜித் விஜேமான்ன மேலும் தெரிவித்துள்ளார்.