வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தின் வழக்கு அறையில் இருந்து 7 துப்பாக்கிகள் மற்றும் 170 கிலோ உலர் கஞ்சாவை திருடிய குற்றத்திற்காக வெல்லவாய நீதவான் நீதிமன்ற ஊழியர்கள் இருவர் உட்பட ஆறு பேரை மொனராகலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் அண்மையில் கைது செய்தனர்.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, விற்பனை செய்யப்பட்ட மேலும் 02 துப்பாக்கிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12 போர் துப்பாக்கியும், இந்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியும் இதில் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கு முன்னரும் பொலிஸ் உத்தியோகத்தர்களினால் 12 துளை ரக துப்பாக்கிகள் 02 கண்டுபிடிக்கப்பட்டதுடன், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மொத்த துப்பாக்கிகளின் எண்ணிக்கை நான்காகும்.
மேலும், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வெல்லவாய நீதவான் நீதிமன்ற ஊழியர்கள் இருவரும் தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, சம்பவம் தொடர்பான விசாரணைகளை மொனராகலை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.