புல்முடு பகுதியில் சட்டவிரோத போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புல்முடு முகாமின் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இது இடம்பெற்றுள்ளது.
1,229 சட்டவிரோத போதைப்பொருள் காப்ஸ்யூல்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் புல்முடு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் புல்முடு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.