மயக்க மருந்து நிபுணர்கள் மற்றும் குழந்தை மருத்துவர்களின் பற்றாக்குறை இன்னும் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் ஏனையோர் வெளிநாடுகளில் பயிற்சிக்காக சென்றுள்ளதாகவும் சுகாதார செயலாளர் வைத்திய நிபுணர் பாலித பாஹிபால தெரிவித்துள்ளார்.
இதன்படி, வெளிநாட்டு பயிற்சிக்காக சென்ற சில வைத்தியர்கள் தற்போது நாட்டிற்கு வருவதாகவும் சுகாதார செயலாளர் மேலும் தெரிவித்தார்.
அத்தோடு, அண்மைக்காலமாக ஹம்பாந்தோட்டை மற்றும் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைகளில் விசேட வைத்தியர்கள் இன்மையால் நோயாளர்கள் அவதிபடுவதாகவும் பல தாதியர்கள் வெளிநாடுகளுக்கு பணிபுரியச் சென்றதினாலும், புதிய ஆட்சேர்ப்பு காரணமாக வைத்தியசாலைகளின் பணிகளில் ஈடுபடவில்லை என சுகாதார செயலாளர் வைத்திய நிபுணர் பாலித பாஹிபால குறிப்பிட்டுள்ளார்.