ஈரான் பகுதியில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவலை அடுத்து, உலக சந்தையில் எரிபொருள் மற்றும் தங்கத்தின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை ஆசிய சந்தைகளில் கச்சா எண்ணெய் பீப்பாய் 3% உயர்ந்து 90 டாலராக இருந்த நிலையில் அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலராக இருந்தது.
புதிய விலையானது சமீபத்தில் பதிவான அதிகபட்ச விலையாக பார்க்கப்படுவதுடன் ஜப்பான், ஹாங்காங், தென் கொரியா ஆகிய நாடுகளில் பங்குச் சந்தை சரிந்துள்ளதாகவும், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் குறித்து பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மிகுந்த கவலையடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.