போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை கைது செய்வதற்காக நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் மேலும் 728 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 10 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நடவடிக்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 25 பேரை தடுத்து வைத்து உத்தரவுகள் பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.