ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் அதிகாரமளிக்கப்பட்ட அரிசி விநியோகம் இன்று (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்படி, பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் இயங்கும் உலக உணவுத் திட்டத்தின் பணிப்பாளர் நாயகத்தினால், பாடசாலை உணவுக்காக வலுவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படஉள்ளது.
மேலும், முதற்கட்டமாக இன்று மாகாண மட்டத்தில் 735 மெற்றிக் தொன் அரிசி விடுவிக்கப்பட்டதோடு நாளை (20) மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகள் மற்றும் அந்தந்த பிரதேசத்தின் பொது சுகாதார பரிசோதனை உத்தியோகத்தர்களின் மேற்பார்வையின் கீழ் இந்த அரிசி இருப்பு பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும்.