உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் டிக்டாக் சமூக ஊடக வலையமைப்பை அமெரிக்காவில் தடை செய்வதற்கான முக்கிய திட்டத்தில் அமெரிக்காவின் செனட் சபை கையெழுத்திட்டுள்ளது.
இதேவேளை, டிக்டோக்கை தடை செய்யும் திட்டம் தனக்கு வந்தால், அதில் கையெழுத்திடுவேன் என்று ஜோ பைடன் முன்பு கூறியிருந்த நிலையில் அமெரிக்க அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கையெழுத்திட்டால், இந்த திட்டம் சட்டமாக மாறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய திட்டத்தின் படி, டிக்டோக்கை வைத்திருக்கும் நிறுவனத்திற்கு அதன் பங்குகளை ஏலம் விட 09 மாதங்கள் அவகாசம் வழங்கப்படும், இல்லையெனில் டிக்டோக்கை அமெரிக்காவில் தடைசெய்யப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 170 மில்லியன் அமெரிக்கர்கள் தற்போது டிக்டோக் சமூக ஊடகத்தைப் பயன்படுத்துபதாகவும் தடை காரணமாக 07 மில்லியன் வணிகங்கள் பாதிக்கப்படும் என்றும், அமெரிக்கா ஆண்டுக்கு 24 பில்லியன் டொலர்களை இழக்கும் என்றும் டிக்டோக்கினை வைத்திருக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.